யாழ்பாணத்தில் சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி

610a7164f9dbfc7d40be1c856005e737
610a7164f9dbfc7d40be1c856005e737

மாவை கலட்டி பகுதியில் வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை சிறுத்தை கடித்ததில் 5 ஆடுகள் காயமடைந்துள்ளதுடன் 9 ஆடுகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவை கலட்டிப் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றுக்குள் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளை கடித்ததில் 5ஆடுகள் காயமடைந்துள்ளதுடன் 9ஆடுகள் இறந்துள்ளன.சிறுத்தை கடித்துவிட்டு தப்பி சென்றுள்ளது.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்றபடமை குறிப்பிடத்தக்கது.