நாட்டில் முதல் முறையாக இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை!

1200px Shivas Kinder 0120
1200px Shivas Kinder 0120

நாட்டில் முதல் முறையாக இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை ஒன்று மின்னேரியா தேசிய பூங்காவில் அடையாளங் காணப்பட்டுள்ளது.

குறித்த யானையையும் அதன் குட்டிகளையும் மின்னேரிய பூங்காவின் அதிகாரிகள் அவதானித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குட்டிகள் பிறந்து மூன்று அல்லது நான்கு வாரங்களே இருக்குமெனவும் குறித்த பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.