கோத்தாபய-சுதந்திரகட்சிக்கு இடையிலான விசேட சந்திப்பு!!

slpp slfp
slpp slfp

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (Oct.14) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 19ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருடன் கைச்சாத்திடவுள்ள 17 அம்ச உடன்படிக்கை குறித்தே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரகட்சி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில் சுதந்திரக்கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்குமிடையில் கட்சி ரீதியான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டு இரு கட்சிகளினதும் செயலாளர்கள் கைச்சாத்திட்டிருந்தனர்.

இந்நிலையில் 17விடயங்களை உள்ளடக்கிய மற்றுமொரு ஒப்பந்தம் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவுக்கும், சுதந்திரக்கட்சிக்கும் இடையில் கைத்திடப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்திலுள்ள விடயங்களை இறுதி செய்வதற்கான கலந்துரையாடலே இன்று இருதரப்பின் கட்சிப்பிரதிநிதிகளுடன் இடம்பெறவுள்ளது.