சங்குபிட்டி பாலத்தில் கோர விபத்து; மூவர் ஆபத்தான நிலையில்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 5
625.500.560.350.160.300.053.800.900.160.90 1 5

பூநகரி சங்குப்பிட்டி பாலத்தில் இன்றிரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர்.  இவர்கள் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பூநகரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பரும் பூநகரி நோக்கி பயணித்த ஓட்டோவும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து நேரிட்டது.

இதில் ஓட்டோவில் பயணித்த கிளிநொச்சியை சேர்ந்த 03 இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இவ்விபத்தில் கிளிநொச்சி ஆனந்தபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் (வயது-24), பிரியதர்சன் (வயது-25) மற்றும் கிளிநொச்சி நகரைச்  சேர்ந்த த.டர்சிகன் (வயது-22) ஆகியோரே படுகாயமடைந்தனர். இதில் ஒருவர் கால்களை இழந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.