கொரோனா தொற்றிலிருந்து மேலும் 12 பேர் மீண்டனர்!

5

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1979 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 12 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்களில் 2 கடற்படையினரும் உள்ளடங்குவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து இதுவரையில், 894 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 94 ஆகப் பதிவாகியுள்ளதுடன் இன்னும் 104 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.