இன்று மாத்திரம் 57 கொரோனா தொற்றாளிகள்!

unnamed file 2
unnamed file 2

நாட்டின் கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திலுள்ள கைதிகள் மற்றும் பணிக் குழுவை சேர்ந்த 56 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திலுள்ள 450 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த 56 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்று அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.

இத்துடன் இன்று காலை மாரவில பகுதியை சேர்ந்த பெண்ணொருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த பெண் கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.