மத்திய கிழக்கில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த நிலையில் பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 100 பேர் இன்று சனிக்கிழமை காலை தனிமைப்படுத்தல் நிறைவு செய்யப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த 100 பேரும் 14 நாட்கள் நிறைவடைந்து இன்றைய தினம் சுய தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த இடங்களுக்கு விமானப்படையின் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் கொழும்பு கண்டி மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட கொழும்பில் சில மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தி உட்படுத்தப்பட்டு தோற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதன் பின்னர் இன்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டனர்.