கச்சேரி அலுவலரை வெட்டியவர் முன்னாள் இராணுவ சிப்பாயாம்

Thiththikfkum isaffgi copy 1 620x330 1

யாழ். மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அலுவலர் மீது வாள்வெட்டு நடத்தியவர் முன்னாள் இராணுவத்தில் இருந்து விலகிய இளைஞர் என்று கூறப்படுகின்றது. இவரை  யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பொலிஸார் நேற்றிரவு கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

கடந்த 8 ஆம் திகதி புதன்கிழமை யாழ். மாவட்ட செயலகம் முன்பாக மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் கொண்ட குழு சுற்றுச்சூழல் திணைக்கள உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு நடத்திவிட்டு தப்பிச் சென்றது.

பட்டப்பகலில், பாதுகாப்பு நிறைந்த யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 6 பேரைக் கைது செய்தனர்.

அவர்கள் நீர்வேலியில் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட பொலிஸார் வாள்கள், கைக்கோடரிகள், இராணுவ சீருடைகளை மீட்டனர். கைதானவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இராணுவத்தில் இருந்து விலகிய நபர் ஒருவரை  தேடி வந்தனர். இந்நிலையில் அவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.