நாட்டின் கண்டி குண்டசாலை பிரதேசத்தில் இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அர்ஜூன திலகரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த இராணுவ அதிகாரி கடந்த 25 ஆம் திகதி விடுமுறையில் வந்துள்ளதுடன் 11 நாட்கள் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
அவரது வீடு அமைந்துள்ள பிரதேசத்தில் அவருடன் பழகிய நபர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அடையாளம் காணப்பட்டவர்களில் 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் திலகரட்ன குறிப்பிட்டுள்ளார்.