இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் யுத்தத்தின்போது இராணுவத்தினரும் இராணுவத் தளபதிகளும் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் ஒருவருக்கு பதிலளித்த இராணுவத் தரப்பு, விடுதலைப் புலிகள் யாரும் இராணுவத்திடம் சரணடையவில்லையெனவும் அரசாங்கத்திடமே சரணடைந்தனர் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.