நாட்டின் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் கொரோனா தொற்று ஊடாக நாடு பூராகவும் கொரோனா தொற்று பரவவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பை பேணிய 14 பேருக்கு இவ்வாறு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2631 ஆக அதிகரித்துள்ளது.
1981 நபர்கள் பூரண குணமடைந்துள்ள நிலையில் 639 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.