கணவனை தடியால் தாக்கி காயப்படுத்திய மனைவி!

thumb large dadad1
thumb large dadad1

தனது கணவனை தடியால் தாக்கி காயப்படுத்திய மனைவியை கட்டுநாயக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

26 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண் மினுவங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் கணவர் தற்போது நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் இருவருக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்த முரண்பாடு காரணமாக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.