மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில் 331 பேர் கைது!

Thiththikfkum isaffgi copy 1 620x330 2

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 331 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரையான காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களில் பெரும்பாலானோர் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதாகியுள்ளனர்.

அதன்படி ஹெரோயின் வைத்திருந்தமைக்காக 135 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமைக்காக 92 பேரும் கைதாகியுள்ளனர்.

இது தவிர பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மேலும் பலரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது