பயாகல – மங்கொன்ன, உஸ்வெல்ல பாலத்தை அண்மித்த கடலில் மூழ்கி காணாமல் போன இரு சிறுமிகளின் புகைப்படங்களை வெளியாகியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் இருவரே காணாமல் போயுள்ளனர்.
கடல் அலையில் விளையாடிய சிறுமிகள் நால்வர் திடீரென ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவர் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அலையில் மிதந்து சென்ற சிறுமிகள் இருவரும் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன சிறுமிகளை கடற்படையின் சுழியோடிகள் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.