ஊரடங்கு உத்தரவு மற்றும் விடுமுறை வழங்குவது குறித்து இதுவரையில் அரசாங்கத்தினால் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமூகத்தில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துக்கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.