க.பொ.த (உ/த) பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் தொடர்பில் அறிவிக்காதிருப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நேற்று செ (14) மாலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
கொரோனா நிலைமையினால் திகதிகளை தற்போது அறிவிக்காதிருப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒருநாள் மற்றும் சாதாரண விநியோக சேவைகள் இன்று (15) முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும், பரீட்சார்த்திகள் தமக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்களை மின்னஞ்சல் மூலமாக கோருவதன் மூலம் 48 மணித்தியாலங்களில் பெற்றுக் கொள்ள முடியுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 0112 78 43 23 – 1911 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்தும் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியுமென்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.