நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா முற்றாக மறுத்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில், புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் உள்ளிட்டோர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.அத்துடன் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதும் இரண்டாம் நிலை நோயாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
சுகாதார அதிகாரிகள் உரிய பிரதேசங்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வர். நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படவில்லை.
எனினும் சமூக இடைவெளி உட்பட சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.