நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற இம்ரானுக்கு கெளரவம்!

மஹ்ரூப்
மஹ்ரூப்

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமாகிய இம்ரான் மஹ்ரூப் அதிக நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் Manthri.lk யினால் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற காலத்தில் 90 வீதத்துக்கு அதிகமான நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 225 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இம்ரான் மஹ்ரூப் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகிய இருவர் மட்டுமே அதிக நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டு இந்தக் கௌரவத்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.