இலங்கையில் கொரோனா நோயாளிகளை அடையாளம் காண இதுவரை 130,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் (Polymerase Chain Reaction) செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிக்கையின் படி, பெப்ரவரி மாதம் முதல் நாட்டில் மொத்தமாக இதுவரை 130,390 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று (15.07.2020) 2,470 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 2,674 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது