தபால் மூலம் வாக்களிப்பு; அதிகளவான விண்ணப்பங்கள் நிராகரிப்பு

postel vot
postel vot

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 78,403 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற 717,918 விண்ணப்பங்களில் 78,403 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 639,515 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நவம்பர் 03ஆம் திகதி முதல் நவம்பர் 09ஆம் திகதி வரை நடைபெறுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.