பொது தேர்தலுக்கு அமைவான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று 4 ஆவது நாளாகவும் இடம்பெற்றது.
காவல்துறை நிலையங்கள், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவுகள், மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் அஞ்சல்மூல வாக்களிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம் நாளைய தினமும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது
அத்துடன் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒதுக்கப்பட்ட திகதியில் அஞ்சல்மூல வாக்குகளை அளிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் அஞ்சல்மூல வாக்குகளை அளிக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.