சட்டவிரோதமான முறையில் உள்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சொகுசு சிற்றூர்ந்து மற்றும் சொகுசு வேன் ஒன்றும் கொள்கலன் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
வாகன பாகங்கள் இறக்குமதி எனும் போர்வையில் குறித்த இரு சொகுசு வாகனங்கள் உள்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள தடுப்பு பிரிவு பணிப்பாளர் பிரியந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக வாகன பாகங்கள் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் குறித்த வாகனங்கள் தடைவிதிக்கப்பட முன்னர் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது