கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பிலான அனைத்துப் பணிகளிலிருந்தும் விலகுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று மதியம் 12 மணியிலிருந்தே தாம் இந்தப் பணியிலிருந்து விலகினர் என்று, அந்த சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று எதிர்வரும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படவுள்ளது.
அந்த, வர்த்தமானியில் தொற்று ஒழிப்புத் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படவில்லை என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் பேசியுள்ளார் என்றும் அவர் சாடினார்.
பொதுச் சுகாதார பரிசோதகர்களின் நடவடிக்கைகள் தமது அமைச்சுக்கு சிரமத்தையும் தடையையும் ஏற்படுத்துகிறது என்று பவித்திரா வன்னியாராச்சி குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.