எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றி பெற செய்தால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில் வாய்ப்புக்களை இழந்த அனைவருக்கும் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தள்ளார்.