ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் நபரொருவரை பிலிமத்லாவை பகுதியில் வைத்து கண்டி மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது குறித்த நபரிடம் இருந்து 1.20 கிலோகிராம் கேரள கஞ்சாவினை குறித்த பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபர் குறித்த கஞ்சா தொகையை உந்துருளியொன்றில் வைத்து கொண்டுச் சென்றுக்கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.