நாட்டில் 2704 பேருக்கு கொரோனா தொற்று

3dcafcda 304990 550x300 crop

COVID – 19 தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்றைய தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,704 ஆக அதிகரித்துள்ளது.

* பிலிப்பைன்சில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவர்
* கந்தக்காடு முகாமைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புகளைப் பேணிய ஹோமாகவைச் சேர்ந்த நால்வர்
* லங்காபுரவைச் சேர்ந்த ஒருவர்
* சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கைதி ஒருவர் ஆகியோரே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களாவர்.

COVID – 19 தொற்றுக்குள்ளான 11 பேர் நேற்று குணமடைந்ததுடன், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,023 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கந்தக்காட்டில் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண்பதற்காக இதுவரை 6,000 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.