பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 10

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 2 கடற்படையினர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 903ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்னும் 3 கடற்படையினர் மாத்திரமே கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.