செஞ்சோலை காணி விவகாரம் தொடர்பில் நாமல் குழு ஆராய்வு

Namal Visit in kilinochchi Sencholai
Namal Visit in kilinochchi Sencholai

கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல காணி விடயம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று ஆராய்ந்தனர்.

இன்று பிற்பகல் குறித்த பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் அங்கஜன் இராமநாதனும் சென்றிருந்தார்.

இதன்போது செஞ்சோலை சிறுவர் இல்ல காணியில் வசிப்போரின் சட்ட ரீதியான பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்த நாமல் ராஜபக்ஷ காணி விடயம் குறித்து தீர்க்கமான முடிவு ஒன்றை தாம் பெற்று தரவதாக செஞ்சோலை குடும்பங்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

இதேவேளை, குறித்த குடும்பங்களின் வாழ்க்கை தற்போதைய வாழ்க்கைச் சூழலை அவர் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.