முத்தரப்பு படைகளால் பராமரிக்கப்பட்டு வரும் 53 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,052 நபர்கள் இன்னும் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
கொவிட்-19 தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு நிலையங்களிலிருந்து, இதுவரை 24,203 நபர்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறையை முடித்து வெளியேறியுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறையை முடித்த மேலும் 6 நபர்கள் இன்று கல்பிட்டி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதனிடையே 10 பேர் கட்டாரிலிருந்து இன்று நாடு திரும்பியுள்ளதுடன், அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.