பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா ; மஹிந்த அமரவீர

bus 1
bus 1

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக தனியார் பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவது சவாலான விடயம் என அந்த பஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் எந்த சூழலிலும் பஸ் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பஸ் உரிமையாளர்களுக்கு அதிகபட்ச சலுகைகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் மேலும் கூறினார்.

பஸ் உரிமையாளர்களின் வருமானம் குறைந்துள்ளமை தொடர்பில் தற்போது கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் தெரிவித்த அவர், குறிப்பிட்ட சலுகைள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பயணிகளுக்கும் பொருளாதார பிரச்சினை இருக்கும் என தெரிவித்த அவர், ஆகவே பஸ் கட்டணங்களை அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.