பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை!

school
school

ஒக்டோபர் 9ம் திகதி முதல் நவம்பர் 16ம் திகதி வரை இரண்டாம் தவணைக்காக அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு இன்று (20) சற்றுமுன் அறிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒக்டோபரில் நடைபெறுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திட்டமிட்டபடி 27ம் திகதி தரம் 11, 12 மற்றும் 13ம் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும் என்பதும், ஏனைய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஓகஸ்ட் 10ம் திகதி ஆரம்பமாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.