எம்.சி.சி. ஒப்பந்தம் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன?

625.500.560.350.160.300.053.800.900.160.90 21
625.500.560.350.160.300.053.800.900.160.90 21

ஆகஸ்ட் 5ஆம் திகதிக்கு முன்னர் எம்.சி.சி.  ஒப்பந்தம் குறித்த தமது நிலைப்பாட்டை அரசு நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஜே.வி.பி. வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான விஜித ஹேரத் மேலும் தெரிவித்ததாவது

“கடந்த  ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான தேர்தல் பிரசாரமாக எம்.சி.சி. ஒப்பந்தமே அமைந்திருந்தது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய 24 மணித்தியாலத்துக்குள் எம்.சி.சி. ஒப்பந்தம் குப்பைத் தொட்டிக்குள்  கிழித்தெறிப்படும் எனவும் கூறினர். ஆனால், புதிய அரசு அமையப்பெற்றதும் இந்த ஒப்பந்தத்தைப் பரிசீலிக்க குழுவொன்றை அமைத்திருந்தது.

குறித்த குழு அறிக்கையை சமர்ப்பிக்கத் தாமதமானபோதும் அறிக்கையை வெளியிட  வேண்டிய சூழ்நிலை எழுந்தது.

ஜுலை முதலாம் திகதி இந்த அறிக்கை அமைச்சரவைக்கு  சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு வாரக்காலப்பகுதிக்குள் தமது மதிப்பீடுகளைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர்களுக்குக் கூறப்பட்டது. தற்போது 22ஆம் திகதிவரை அதனையும் நீடித்துள்ளனர். இவ்வாறு காலதாமதத்தை ஏற்படுத்துவது தேர்தலின்  பின்னர் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடவேயாகும்” -எனவும் குறிப்பிட்டுள்ளார்