காட்டு யானை தாக்கிய விரிவுரையாளர் உயிருடனே உள்ளார்

QPHWT ak
QPHWT ak

காட்டுவிலங்கின் தாக்குதலில் படுகாயமடைந்தார் என்று கூறப்பட்ட பெண் விரிவுரையாளர் காயத்ரி டில்ருக்சி உயிருடனே இருக்கிறார் என்று யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு விகாரையில் வழிபட்டுவிட்டு தனது அறைக்கு திரும்பிய அவரை காட்டு யானை தாக்கியதாகக் கூறப்படுகின்றது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேரக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதேநேரம், அவர் இன்று திங்கட்கிழமை காலை உயிரிழந்து விட்டார் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்தத் தகவலில் உண்மை இல்லை என்றும், அவர் கோமா நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் கூறப்படுகின்றது