கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து கடற்படை வீரர்களும் பூரண குணமடைந்துள்ளனர்

1595292466 navy 2
1595292466 navy 2

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான அனைத்து கடற்படை வீரர்களும் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய வெலிசர கடற்படை முகாமில் இருந்து வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 906 கடற்படை வீரர்களும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

சிகிச்சையின் பின் வெளியேறும் கடற்படை வீரர்கள் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 2 வாரங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) பாதிக்கப்பட்டோர் முழு விபரம்…

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை – 2,730

சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை – 678

புதிதாக கண்டறியப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை – 6+

குணமடைந்த நோயாளர்களின் எண்ணிக்கை – 2,041

உயிரிழந்தோர் எண்ணிக்கை – 11