இன்றுடன் நிறைவடையும் அஞ்சல் மூல வாக்களிப்பு

postal voting election
postal voting election

எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொது தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் அஞ்சல்மூல வாக்களிப்பினை அளிக்க முடியாதவர்களுக்கு இன்றைய தினம் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமான அஞ்சல்மூல வாக்களிப்பிற்காக 7 நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

அத்துடன் ராஜாங்கனை பகுதியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர் அடையாளங்காணப்பட்டதை அடுத்து ஒத்தி வைக்கப்பட்ட ராஜாங்கனை பிரதேச செயலக அதிகார பகுதியின் அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.