53 மத்தியநிலையங்களில் 5,819 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்…!

EUNFm3PXYAEwp Q

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 53 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5819 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கொரோனாவை தடுப்பதற்கான தேசிய மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலிருந்து 132 பேரும் மின்னேரியா தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலிருந்து 108 பேரும் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

இலங்கையில் இதுவரை 24,460 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கட்டார் நாட்டிலிருந்து இன்று அதிகாலை 30 பேர் நாடு திரும்பியுள்ளனர் எனவும் எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.