மேல் மாகாணத்தில் நேற்று( திங்கட்கிழமை) காலை 6 மணிமுதல் இன்று அதிகாலை 5.30 வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து போதை பொருள் குற்றத்திற்குரிய சந்தேக நபர்கள் 364 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஹெரோயின் தொடர்பில் 168 பேர் உள்ளடங்குவதோடு, முகக்கவசமின்றி நடமாடிய 1708 பேர் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.