32 வெளிநாட்டு மாலுமிகள் நாட்டை வந்தடைந்தனர்!

90062 1592424984

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் பணியாற்றுவதற்காக 32 வெளிநாட்டு மாலுமிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

தோஹாவிலிருந்து கட்டார் எயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர் -668 என்ற விமானத்தின் மூலமாகவே இவர்கள் இன்று அதிகாலை 1.45 மணிக்கு பண்டாரநாயக்க, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்திற்கு வந்த பின்னர் அவர்களை பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.