மேல் மாகாணத்தில் 2,802 நபர்களுக்கு எச்சரிக்கை!

pti08 03 2020 000145b 1584985898

மேல் மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் முகக் கவசம் அணியத் தவறியமைக்காகவும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறியமைக்காவும் 2,802 நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி முகக் கவசம் அணியத் தவறிய 1,708 நபர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய 1,094 நபர்களுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 23 மணிநேர சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 364 நபர்களும் மேல் மாகாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.