வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் நேற்றயதினம் (திங்கட்கிழமை) வீசிய பலத்த காற்றினால் அதிகளவான பப்பாசிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்றுமாலை வீசிய காற்றுடன் கூடிய மழையினால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், விவசாய செய்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக இருவேறு பகுதிகளில் செய்கை பண்ணப்பட்டிருந்த இரண்டு ஏக்கர் அளவிலான பப்பாசி செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2இலட்சம் ரூபாய் அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்