மேலும் 7 பேர் குணமடைவு!

@ 3
@ 3

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2048 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 671 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் இதுவரை 830 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குறிப்பிடப்படுகிறது.