விவாதம் செய்வதற்கு நான் தயார் : எம்.ஏ.சுமந்திரன்!

MA Sumanthiran
MA Sumanthiran

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் என். சிறீகாந்தா மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளரும் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பொதுவெளியில் பகிரங்க விவாதம் நடாத்துவதற்கு தான் தயாராக உள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.

என்.சிறீகாந்தா தன்னுடன் விவாதம் செய்ய வருமாறு சவால் விட்டிருக்கிறார்.அதற்கு இன்று நான் பதிலளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவருடைய சவாலை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.பொதுவெளியில் நடுநிலையான நபர் ஒருவரின் முன்னிலையில் விவாதம் செய்வதற்கு நான் தயார். அதனை யாராவது ஒழுங்கமைப்புச் செய்தால் அல்லது சிறீகாந்தாவே ஒழுங்கமைத்தால் கூட பரவாயில்லை எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதே வேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் ஏற்கனவே நான்கு தடவைகள் விவாதித்திருக்கின்றேன். விவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக நொண்டிச் சாட்டுக்களை கூறிக்கொண்டு அவர், ஓடுகிறார். அவரைத் துரத்திப் பிடிக்கும் அவசியம் எனக்கில்லை. ஆனால், அவருடனும் விவாதிக்க நான் தயாராக உள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.