யாழ். சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு

jaffnna
jaffnna

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விமான சேவை இம் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது இந்த விமான சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை சிவில் விமான சேவை அதிகாரசபை அறிவித்துள்ளது.

விமான நிலையம் வடக்கில் ஆரம்பமாவதை அடுத்து அந்த பிரதேசம் மேலும் அபிவிருத்தியடையக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இதே போன்று இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதுடன் மறைமுகமான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.