சுற்றிவளைப்புகளில் 1,700 பேர் கைது!

9409 2015121445 1
9409 2015121445 1

நாட்டில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,700 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிபொருள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 276 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டுகளில் 691 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 268 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 147 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தகுற்றச்சாட்டில் 07 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 03 பேரும், வெடிபொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 307 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.