பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடு!

625.500.560.350.160.300.053.800.900.160.90 24
625.500.560.350.160.300.053.800.900.160.90 24

தனது கணக்கு முடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இன்று புதன்கிழமை தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவில் இவ்விடயம் தொடர்பில் கடிதம் ஒன்றை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் உரித்துடையதாகும். ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிப்பதற்கு எனக்குள்ள அடிப்படை உரிமையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவிடம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.