நாட்டில் 2752 பேருக்கு கொரோனா தொற்று

02 10

நாட்டில் நேற்று மொத்தமாக 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 2752 ஆக உயர்வடைந்துள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய 14 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய 07 பேரும், கந்தகாடு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையத்தில் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.