மேலும் சிலர் தாயகம் திரும்பினர்

SriLanka Airlines
SriLanka Airlines

வௌிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் இன்று (வியாழக்கிழமை) (23) காலை தாயகம் திரும்பியதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அபுதாபியில் இருந்து ஒருவரும் மற்றும் சென்னையில் இருந்து 14 பேரும் தாயகம் திரும்பியுள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.