ஐ.பி.எல். போட்டிகளை நடாத்த சாத்தியம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஐ.பி.எல் போட்டிகளுக்கான அட்டவணை எதிர்வரும் வாரம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகளை நடாத்துவது சாத்தியமானதாக அமையவில்லை.

ஆகவே குறித்த போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதேபோல், இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரும் ஒத்திவைக்கப்பட்டமையால் ஐ.பி.எல். போட்டிகளை நடாத்துவது மேலும் வசதியாக அமைந்துள்ளது.