மதுபோதையில் வாகனம் செலுத்திய 248 பேர் கைது

Arrested Handcuff
Arrested Handcuff

காவல் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 248 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 08 மணிமுதல் இன்று காலை வரையான காலப்பகுதிக்குள் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இதன்போது வேறு சில குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 2596 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.