அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை….!

5 4

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 13 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதன்படி, வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 77ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை இரண்டாயிரத்து 752 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைரஸ் தொற்றுக்கு உள்ளான 664 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.